பதிவு செய்த நாள்
28 அக்2016
03:52
மும்பை;மும்பையில், அளவீடு சட்டத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள், ‘பேக்கேஜ்’ விதிகளை மீறி, பொருட்களை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, பிவாண்டியில் உள்ள அந்நிறுவனங்களின் கிடங்குகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட அளவில் பொருட்கள், ‘பேக்’ செய்யப்படாமலும், அட்டையில், எடை, தயாரிப்பு தேதி, அதிகபட்ச விலை உள்ளிட்ட விபரங்கள் அச்சிடப்படாததும் தெரியவந்தது. இதையடுத்து, பிளிப்கார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த, இன்ஸ்டாகார்ட் நிறுவனத்திடம், 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 18 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அமேசான் செல்லர்ஸ் நிறுவனத்தில் இருந்து, 47.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 21 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இரு நிறுவனங்கள் மீதும், பேக்கேஜ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|