பதிவு செய்த நாள்
28 அக்2016
03:55
பெங்களூரு:ஏதெர் எனர்ஜி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு, ஹீரோ மோட்டோகார்ப், 250 கோடி ரூபாய்க்கு ஆர்டர் வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், ஏதெர் எனர்ஜி. இந்நிறுவனம், பேட்டரியால் இயங்கக்கூடிய, எலக்ட்ரிக் வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறது.கடந்த, 2013ல் துவங்கப்பட்ட ஏதெர் நிறுவனம், டைகர் குளோபல், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து, நிதியை பெற்றுள்ளது. இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப், இந்நிறுவனத்தில், 205 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து, ஏதெர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘எங்கள் நிறுவனத்தில், ஹீரோ மோட்டோகார்ப் பங்கெடுத்ததன் மூலம், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மேம்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வாகனங்கள் தயாரிக்க வடிவமைப்பு வழங்கப்படும்’ என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|