கள்ள நோட்டுகள் புழக்கம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கைகள்ள நோட்டுகள் புழக்கம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ... விளைச்சல் அமோகம் : சரியுது வாழைப்பழ விலை விளைச்சல் அமோகம் : சரியுது வாழைப்பழ விலை ...
ஓட்டலில் ரூ.20க்கு இரண்டு இட்லி : உரிமையாளர்களுடன் அரசு பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2016
12:20

உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஓட்டல் உரிமையாளருடன், விலை கண்காணிப்பு குழு பேச்சு நடத்த உள்ளது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, தமிழக அரசு கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளது. அதில், உணவு, கூட்டுறவு, நிதி மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உள்ளனர். தற்போது, சென்னை உட்பட பல நகரங்களில் உள்ள பெரிய ஓட்டல்களில், இரண்டு இட்லி, 30 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. மற்ற பொருட்களும், அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.எனவே, ஓட்டல்களில் உணவு பொருள் விலையை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுடன் பேச்சு நடத்த, விலை கண்காணிப்பு குழு முடிவு செய்துள்ளது.இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, சாதாரண ஓட்டலில் இரண்டு இட்லி, 25 ரூபாய்; உயர்தர சைவ உணவகங்களில், 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவே, உள்ளாட்சி அமைப்புகள், 'அம்மா' உணவகங்களை துவக்கின. அதற்கு, ஏழைகளிடம் வரவேற்பு உள்ளது; நடுத்தர பிரிவினர் செல்வதில்லை. தற்போது, காய்கறி, அரிசி, சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, ஓட்டல் உரிமையாளர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். நடுத்தர ஓட்டல்களில், இரண்டு இட்லி விலை, 20 ரூபாய்; உயர்தர ஓட்டல்களில், 30 ரூபாய்க்குள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற பொருட்களின் விலையை குறைக்கவும் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)