பதிவு செய்த நாள்
28 அக்2016
12:25
தமிழகத்தில், மீண்டும் வாழைப்பழ விளைச்சல் அதிகரித்து உள்ளதால், விலை சரிந்துள்ளது.நாட்டில், வாழைப்பழ உற்பத்தியில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சில மாதங்களாக, வாழைப்பழ உற்பத்தி பெருமளவு குறைந்ததால், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. வெளிமாநில வரத்தும் குறைந்ததால், விலை கணிசமாக உயர்ந்தது. பூவன் உள்ளிட்ட பெரும்பாலான வாழைப்பழ ரகங்கள், கிலோ, 100 ரூபாய் வரை விற்கப்பட்டன.இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், வாழை விளைச்சல் அதிகரித்து, சென்னைக்கு மட்டும், தினமும், 100 லாரிகளில், வாழைப்பழம் வருகிறது; விலையும் கட்டுக்குள் வந்துள்ளது.சில்லரையில், ஒரு கிலோ நேந்திரம் பழம் - 55 ரூபாய், ஏலக்கி - 45, பூவன் - 25, செவ்வாழை - 45, ரஸ்தாலி - 30, கற்பூரம் - 35, நாட்டு பச்சை - 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.பண்டிகை நேரத்தில், வாழைப்பழ விலை சரிந்து வருவது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|