பதிவு செய்த நாள்
30 அக்2016
03:34
முந்திரி விலை உயர்வால், அதன் ஏற்றுமதி வெகுவாக சரிவடைந்துள்ளது.இந்தியாவில் இருந்து, பல நாடுகளுக்கு, முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் செப்., வரையிலான காலத்தில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 36 ஆயிரத்து, 895 டன் என்றளவில் உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 48 ஆயிரத்து, 901 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையில் முந்திரி ஏற்றுமதி, 13.24 சதவீதம் குறைந்து, 2,464 கோடி ரூபாயில் இருந்து, 2,138 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.கடந்த ஆறு மாத காலத்தில், முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் ‘கார்டின்’ திரவத்தின் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 6,285 டன்; மதிப்பின் அடிப்படையில், 24.32 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.இதுகுறித்து, முந்திரி ஏற்றுமதி கூட்டமைப்பினர் கூறுகையில்,‘கச்சா முந்திரியின் விலை, 27 சதவீதம் வரை அதிகரித்துள்ளது; இதனால், கேரளாவில் உள்ள, 50 சதவீத முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விலை உயர்வால், முந்திரி ஏற்றுமதி தொடர்ந்து குறைந்து வருகிறது’ என, தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|