பதிவு செய்த நாள்
30 அக்2016
03:36
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியும், தனியார் துறையின் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியும், கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இதனால், இவ்வங்கி வாடிக்கையாளர்களுக்கு, வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டிச் சுமை குறையும் நிலை உருவாகியுள்ளது.எஸ்.பி.ஐ., என சுருக்கமாக அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, கடன்களுக்கான வட்டியை 0.15 சதவீதம் குறைத்துள்ளது.
அதுபோல, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கடன்களுக்கான வட்டியை, 0.10 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு, நவ., 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, இவ்வங்கிகள் அறிவித்துள்ளன.ரிசர்வ் வங்கி தொடர்ந்து அறிவுறுத்தியதன் பேரில், வங்கிகள் வட்டியை குறைத்துள்ளன. இதைத் தொடர்ந்து, மேலும் பல வங்கிகள் வட்டியை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2015 ஜனவரி முதல், நடப்பு அக்., 4ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 1.75 சதவீதம் வரை குறைத்துள்ளது.
ஆனால், இதே அளவிலான வட்டியை, வங்கிகள் குறைக்கவில்லை. அவை, 0.50 – 0.85 சதவீத அளவிற்கே வட்டியை குறைத்துள்ளன.அதிலும், எஸ்.பி.ஐ., தான், அதிக அளவிலான வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரெப்போ வட்டியை குறைத்தால், வங்கிகள், கடன்களுக்கான வட்டியை குறைக்கும்; இதன் மூலம் வங்கியில் கடன் பெறுவோர் பயன்பெறுவர்.ஆனால், தனது வட்டி குறைப்பை, வங்கிகள் அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் உள்ளது, ரிசர்வ் வங்கிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|