பதிவு செய்த நாள்
30 அக்2016
03:37
மும்பை:இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், கடந்த செப்டம்பரில், அயல்நாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து திரட்டிய கடன், 5.8 சதவீதம் குறைந்து, 246 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 261 கோடி டாலராக இருந்தது.பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், அன்னிய வர்த்தக கடன்கள் பிரிவின் கீழ், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள், விருப்பத்தின் பேரில் பங்குகளாக மாறும் கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றின் மூலம், வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை திரட்டிக் கொள்கின்றன.
இந்த வகையில்,இந்திய நிறுவனங்கள், செப்டம்பரில், மத்திய அரசு அனுமதியின்றி முதலீடுகளை திரட்டிக் கொள்ளும் பிரிவின் கீழ், வெளிநாடுகளில் இருந்து, 119 கோடி டாலர் திரட்டியுள்ளன.இதில், ரிலையன்ஸ் சிபுர் எலஸ்டோமெர்ஸ், 33 கோடி டாலர்; விப்ரோ, 15 கோடி டாலர் திரட்டியுள்ளன.இதர நிறுவனங்கள், அரசு ஒப்புதலுடன் முதலீடுகளை திரட்டும் பிரிவின் கீழ், 38.70 கோடி டாலர் திரட்டியுள்ளன.இதில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், 20 கோடி டாலர்; ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன், 10 கோடி டாலர்; இந்தியன் சிந்தடிக் ரப்பர் நிறுவனம், 7 கோடி டாலர் திரட்டியுள்ளன.
இந்நிறுவனங்கள், ஏற்கெனவே வாங்கிய அன்னிய கடன்களை திரும்ப செலுத்த, புதிய முதலீடுகளை திரட்டியுள்ளன.ரிசர்வ் வங்கி, ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்கள் மூலமாக அன்னிய முதலீடுகளை திரட்டிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.அதன்படி, முதன் முதலாக, செப்டம்பரில், ஏழு நிறுவனங்கள் 88.90 கோடி டாலர் திரட்டியுள்ளன.இதில், எச்.டி.எப்.சி., நிறுவனம், 22.47 கோடி டாலர்; ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம், 44.95 கோடி டாலர் ; இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், 19.92 கோடி டாலர் திரட்டியுள்ளன.கடந்த ஆண்டு செப்டம்பரில், அன்னிய வர்த்தக கடன்கள் பிரிவில், ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|