பதிவு செய்த நாள்
30 அக்2016
23:49
நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரும்பாலான இந்திய ஊழியர்கள் நம்பிக்கை கொண்டு உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஊழியர்கள் தங்கள் திறன் வளர்ச்சி வாய்ப்பிலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். மைக்கேல் பேஜ் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்திற் கான வேலைவாய்ப்பு நம்பிக்கை அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, இந்திய ஊழியர்களில், 59 சதவீதம் பேர் தங்கள் வேலை குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆசிய பசுபிக் பகுதியில் இது, 53 சதவீதமாக உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரம் குறித்து, 53 சதவீத ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆசிய பசுபிக் பகுதியில் இது, 33 சதவீதமாக மட்டுமே உள்ளது.மேலும் அடுத்த, 12 மாதங்களில் தங்கள் திறன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்பு குறித்து, பெரும்பாலான இந்திய ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய ஊழியர்கள் பதவி உயர்வு வாய்ப்புகள் தொடர்பாகவும் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் பணியிட சூழல் மற்றும் நம்பிக்கை அதிகமாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பணி திருப்தி சூழலும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|