ஓராண்டில்...நிறு­வ­னங்­களின் அன்­னிய வர்த்­தக கடன்246 கோடி டால­ராக குறைந்­ததுஓராண்டில்...நிறு­வ­னங்­களின் அன்­னிய வர்த்­தக கடன்246 கோடி டால­ராக குறைந்­தது ... ஜெய்ப்பூர் ஆலையில் உற்­பத்தி போஷ் நிறு­வனம் துவக்­கி­யது ஜெய்ப்பூர் ஆலையில் உற்­பத்தி போஷ் நிறு­வனம் துவக்­கி­யது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்­டுக்­கடன் வட்டி விகிதம் பேஸ் ரேட்டில் இருந்து மாற­லாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2016
23:52

குறையும் வட்டி விகித சூழலில், ஏற்­க­னவே வீட்டுக் கடன் பெற்றவர்கள் பழைய பேஸ் ரேட் முறையில் தொடர்­வதா அல்­லது புதிய வட்டி விகித முறைக்கு மாறு­வதா என, தீர்­மா­னிப்­பது நல்­லது.

வட்டி விகிதம் குறைந்து வரும் சூழல், வைப்பு நிதி போன்ற திட்­டங்­களில் முத­லீடு செய்­ப­வர்கள் மத்­தியில் முத­லீட்டு உத்­தியில் மாற்றம் தேவையா எனும் கேள்­வியை எழுப்­பி­யுள்­ளது என்றால், வீட்டுக் கடன் பெற்­ற­வர்கள் மத்­தியில் வேறு­வி­த­மான கேள்­வியை எழுப்­பி­யுள்­ளது. ரிசர்வ் வங்கி கட­னுக்­கான ரெப்போ விகி­தத்தை குறைப்­பது, வீட்டுக் கட­னுக்­கான வட்டி விகிதம் குறைய வழி செய்யும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால், ஏற்­க­னவே வீட்டுக் கடன் பெற்­ற­வர்­களை பொறுத்­த­வரை வட்டி குறைப்பின் பலன் உட­ன­டி­யாக சாத்­தி­ய­மா­வ­தில்லை. இதற்கு காரணம் அவர்கள் கட­னுக்­கான வட்டி விகிதம் பழைய பேஸ்ரேட் முறையில் கணக்­கி­டப்­ப­டு­வது தான்.
கடந்த, 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டுக் கடன் உள்­ளிட்ட கடன்­க­ளுக்­கான வட்­டி­வி­கிதம், ‘மார்­ஜினல் காஸ்ட் ஆப் பண்ட்ஸ் பேஸ்ட் லெண்டிங் ரேட்’ எனப்­படும், எம்.சி.எல்.ஆர்., முறையில் கணக்­கி­டப்­ப­டு­கி­றது. 2010 ஜூலை முதல், 2016 ஏப்ரல் வரை வீட்டுக் கடன் பெற்­ற­வர்­க­ளுக்கு பேஸ் ரேட் முறையில் வட்டி விகிதம் கணக்­கி­டப்­ப­டு­கி­றது.
புதிய முறையின் பலன்வட்டி விகித குறைப்பு பலனை உட­ன­டி­யாக வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளிப்­பதில் வங்­கிகள் தயக்கம் காட்டி வந்த நிலையில், உட­னடி வட்டி விகித பல­னுக்கு வழி­வ­குக்கும் எம்.சி.எல்.ஆர்., முறையை வங்­கிகள் கடை­பி­டிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறி­வு­றுத்­தி­யது. பேஸ் ரேட் முறையில் வங்­கிகள், வட்டி விகித குறைப்பின் பலனை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அளிப்­பதில் தயக்கம் காட்டி வந்­தன அல்­லது தாம­த­மாக இந்த பலனை அளித்­தன. எனினும், புதிய வட்டி விகித கணக்­கீடு முறையின் கீழ், விரை­வாக வட்டி விகித குறைப்பின் பலன் கிடைக்கும் வாய்ப்­புள்­ளது.
பல வங்­கிகள் வட்டி விகி­தத்தை குறைத்­தி­ருப்­பதால் புதிய வாடிக்­கை­யா­ளர்கள் பயன்­பெற்­றுள்­ளனர். எனினும், பழைய முறையில் தொடரும் வாடிக்­கை­யா­ளர்கள் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை. ஏனெனில், அவர்கள் விரும்­பினால் புதிய முறைக்கு மாறிக்­கொள்ளும் வாய்ப்பு இருக்­கி­றது. ஏற்­க­னவே கடன் பெற்ற வாடிக்­கை­யாளர்கள் பேஸ் ரேட்டில் தொடரும் வாய்ப்பு அல்­லது புதிய முறைக்கு மாறிக்­கொள்ளும் வாய்ப்பு அளிக்­கப்­பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது. எனவே, மாற்றம் தேவை என கருதும் வாடிக்­கை­யா­ளர்கள் புதிய முறைக்கு மாறிக்­கொள்­ளலாம்.
இரண்டு வாய்ப்­புகள்பேஸ் ரேட் முறையில் இருந்து மாற நினைக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இரண்டு வித­மான வாய்ப்­புகள் இருக்­கின்­றன. ஒன்று, தாங்கள் கடன் பெற்­றுள்ள வங்­கி­யி­டமே கோரிக்கை வைத்து புதிய வட்டி விகித முறைக்கு மாறிக்­கொள்­ளலாம். பரஸ்­பரம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விதி­முறை­க­ளுக்கு ஏற்ப இந்த மாற்றம் நிகழலாம் என்­றாலும், இதற்­காக கட்­டணம் வசூ­லிக்­கவோ அல்­லது கடனை முன்­கூட்டியே முடிப்­ப­தா­கவோ கரு­தக்­கூ­டாது என ரிசர்வ் வங்கி அறி­வு­றுத்­தி­யுள்­ளது. வாடிக்­கை­யா­ளர்கள் தங்கள் கடனை வேறு ஒரு வங்­கிக்கு மாற்­றிக்­கொள்­வதன் மூலமும் அந்த வங்­கியில் புதிய முறைக்கு மாறலாம். ஆனால், கடன் பெற்ற வங்­கி­யிலே தொடர்­வதா அல்­லது வேறு வங்­கிக்கு மாறு­வதா என்­பதை தீர்­மா­னிக்கும் முன், கடன் விகிதம் மற்றும் பலன்­களை ஒப்­பிட்டு பார்க்க வேண்டும்.
சரி­யான நேரமா?பழைய முறையில் தொடரும் வாடிக்­கை­யா­ளர்கள் புதிய முறைக்கு மாறு­வதை பரி­சீ­லிக்க இது ஏற்ற நேரம் என்­றாலும், பல முக்­கிய அம்­சங்­க­ளையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும் என்­கின்­றனர். வட்டி விகிதம் மேலும் குறைய அல்­லது தற்­போ­தைய நிலையில் தொடர வாய்ப்­புள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது. எனவே, புதிய முறையில் வட்டி விகிதம் குறை­வாக இருக்க வாய்ப்­புகள் அதிகம். ஆனால், எம்.சி.எல்.ஆர்., முறை வட்டி விகித போக்­கிற்கு ஏற்ப மாறக்­கூ­டி­யது. வங்­கிக்கு கடன் கிடைக்கும் விகிதம், டெபா­சிட்­க­ளுக்­கான செலவு விகிதம், நிகர மதிப்பின் மீதான வருவாய் உள்­ளிட்ட அம்சங்­களை கொண்டு எம்.சி.எல்.ஆர்., முறை செயல்­ப­டு­கி­றது. எனவே, ரெப்போ விகிதம் மாறினால் இதுவும் மாறும்.
குறையும் வட்டி விகித சூழலில் இது ஏற்­றது என்­றாலும், நிலைமை மாறினால் சிக்­க­லா­கலாம். பொது­வாக, வீட்டுக் கடன் காலம் முடியும் தறு­வாயில் உள்­ள­வர்கள் பழைய முறை­யி­லேயே தொட­ரலாம் என கரு­தப்­ப­டு­கி­றது. மற்ற வாடிக்­கை­யா­ளர்கள் இரண்டு வாய்ப்­பு­களில் எது சிறந்­தது என பரி­சீ­லித்து முடிவு செய்­வது ஏற்­ற­தாக இருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)