பதிவு செய்த நாள்
31 அக்2016
23:26
சென்னை : ராயல் என்பீல்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், அதிகளவில், புல்லட் வாகனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு, புல்லட் வாகன உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம், தன் மூன்றாவது தொழிற்சாலையை, காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் அமைத்துள்ளது. அந்த ஆலை திட்டமிட்டதற்கு முன்னதாகவே, செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வல்லம் வடகால் தொழிற்சாலை, மாதத்துக்கு, 25 – 30 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கும் திறனுடையது. அங்கு, அடுத்த ஒன்பது மாதங்களில், உற்பத்தி துவங்கும். நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாதங்களில், 3.14 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து, உள்நாட்டில், அதிக வாகனங்களை விற்பனை செய்வதுடன், ஏற்றுமதியையும் அதிகரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|