பதிவு செய்த நாள்
31 அக்2016
23:27
லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த, தேசிய உருக்காலை தொழிலாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச்சில், பிரிட்டனில் உள்ள, நலிவுற்ற டாடா ஸ்டீல் தொழில் பிரிவுகளை விற்கப் போவதாக கூறி, ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் மூலதன முதலீட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றை ஏற்க, தொழிற்சங்கங்கள் மறுத்து விட்டன. எனினும், இப்பிரச்னை தொடர்பான தன் நிலையை, நிர்வாகம் இதுவரை தெரிவிக்கவில்லை.
தற்போது, டாடா குழுமத்தின் தலைவராக, ரத்தன் டாடா மீண்டும், பொறுப்பேற்று உள்ளார். அவர், இப்பிரச்னையில் நிர்வாகத்தின் நிலை என்ன என்பதை, விரைவில் தெளிவுபடுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும், கடினமான உழைப்பிற்கு பின், அவர்கள் நிம்மதியாக வாழ உதவும் வகையில், ஓய்வூதிய திட்டம் இருக்க வேண்டும். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக, இழுபறி நீடிக்கும் இவ்விவகாரத்தில், ரத்தன் டாடா, தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|