பதிவு செய்த நாள்
31 அக்2016
23:29
மும்பை : ஓ.எல்.எக்ஸ்., கால்நடைகளை வாங்குவது, விற்பது ஆகிய நடவடிக்கைகளில் களமிறங்கி உள்ளது.
இணையதள வணிகத்தில் முன்னணியில் உள்ள, ‘அமேசான், பிளிப்கார்ட்’ போன்றவை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, எலக்ட்ரானிக், ஜவுளி, பேஷன் பொருட்கள் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஓ.எல்.எக்ஸ்., ‘ஆப்’ மூலம், கால்நடைகள் வணிகத்தை துவக்கி உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அமர்ஜித் சிங் பாட்ரா கூறியதாவது:இந்திய கிராமங்களில், இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது, கால்நடைகளை வாங்குவதற்கு, விவசாயிகள், ஓர் இடத்தில் இருந்து, அதிக துாரம் செல்கின்றனர். எனவே, இணையதளம் மூலம் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளை வாங்கி, விற்க திட்டமிட்டோம். இதன் மூலம், இருக்கும் இடத்தில் இருந்து, விற்போரும், வாங்குவோரும் பயனடைய முடியும். கடந்த ஒரு மாதத்தில், ஓ.எல்.எக்ஸ்., 842 கால்நடைகள்; 1,840 டிராக்டர்களை பட்டியலிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|