பதிவு செய்த நாள்
02 நவ2016
02:46
புதுடில்லி : நடப்பாண்டு, கோதுமை உற்பத்தி, தேவையை விட குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கோதுமை இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில், அதற்கான சுங்க வரியை குறைக்க வேண்டும் என, மாவு மில் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து, மத்திய அரசு, செப்., 23ல், கோதுமை மீதான இறக்குமதி வரியை, 25 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைத்தது. இந்நிலையில், கோதுமை இறக்குமதி வரியை மேலும் குறைக்க வேண்டும் என, மாவு மில் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது.
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:சர்வதேச சந்தையில், கோதுமை விலை, தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை, உக்ரைன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து, 11 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, இறக்குமதி வரியை மேலும் குறைக்கும் திட்டம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|