பதிவு செய்த நாள்
02 நவ2016
02:47
புதுடில்லி : இந்திய தர நிர்ணய கழகம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிறுவனங்கள் அனைத்தும், நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் பொருட்களை தயாரிக்க வேண்டும்; அப்பொருட்கள் குறித்து, கழகத்தில் பதிவு செய்ய வேண்டும் என, உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், 40 விதமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களுக்கு, தர நிர்ணய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: இந்திய தர நிர்ணய கழகம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் துறையினரின் கோரிக்கைக்கு இணங்க, 40 வகையான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களுக்கு, தர நிர்ணய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது. வாகனம், தொழிற்சாலைகள், பொறியியல் துறைகள் சார்ந்த பயன்பாடுகளுக்கு, இந்த விதிவிலக்கு பொருந்தும். வீட்டு பயன்பாட்டு சாதனங்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றுக்கான தர நிர்ணய விதிகளில் மாற்றம் ஏதுமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|