வேக­மெ­டுக்­குது தயா­ரிப்பு துறை 2 ஆண்­டுகள் காணாத வளர்ச்சிவேக­மெ­டுக்­குது தயா­ரிப்பு துறை 2 ஆண்­டுகள் காணாத வளர்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரிப்பு ...
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சரிந்தால் வாணி கோலாவுக்கு இழப்பு அதிகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2016
02:50

பெங்களூரு: இந்திய ஸ்டார்ட்அப் நிறுவன சந்தையில் சரிவு ஏற்பட்டால், அதில் அதிக முதலீடு செய்துள்ள வாணி கோலாவுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். ஆனால் அதற்காக சற்றும் அஞ்சாமல் இருக்கிறார் அவர்.

இந்தியாவின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான வாணி கோலா(52), கலாரி கேபிடல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். மேலும் பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இடம் பிடித்துள்ளார். 2006ல் தனது வெஞ்சர் கேபிடல் முயற்சிகளைத் தொடங்கிய இவருக்கு, 60க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. 650 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ள இவர், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், மிந்த்ரா, ஜாஸ்பெர், மெட்பிளஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இவர் முதலீடு செய்துள்ளார்.

நடப்பு ஆண்டில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அடி வாங்க ஆரம்பித்துள்ளன. உள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் பெரும் சரிவுக்கு உள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் முதலீடுகளைக் குறைத்து விட்டன. ஆனாலும் வாணி கோலா தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரச்சினையிலிருந்து மீண்டு வரும் என்பது அவரது நம்பிக்கை.

ஐதராபத்தில் பிறந்த வாணி கோலா, உஸ்மானியா பல்கலையில் இன்ஜினியர் பட்டமும், அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பும் படித்தவர். ஐடி துறை அனுபவம் கொண்ட இவர், அமெரிக்காவில் 22 ஆண்டுகள் வசித்தார். 2006ல் இந்தியா வந்த அவர் 210 மில்லியன் டாலர் முதலீட்டை உருவாக்கினார். இந்தியாவில் செர்டஸ் சாப்ட்வேர் என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கிய வாணி, வெளிநாட்டு நிறுவனங்களை விட இங்குள்ள நிறுவனங்களுக்குத்தான் அதிக சாதகமான சூழல் உள்ளதை முதலீட்டாளர்களிடம் தெளிவுபடுத்தி இந்தியாவில் பல முதலீட்டாளர்களை ஈர்த்தார்.

ஈ காமர்ஸ் எதிர்காலம் குறித்து அறியாத காலகட்டத்தில் துணிச்சலாக அதில் கால் பதித்தார். பின் 440 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டி, தனது நிறுவனத்தின் மூலம் 84 முதலீடுகளை மேற்கொண்ட வாணி, அதில் 21 ஸ்டார்ட்அப்களை விற்றார்.
2013ல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கு கை கொடுத்த வாணி, தனது நிதியிலிருந்து 20 சதவீதத்தை அதில் முதலீடு செய்தார். மேலும் மிந்த்ரா, வயா உள்ளிட்ட பல ஆன்லைன் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அவர் முதலீட்டுக்கு பின் பிளிப்கார்ட்டை வாங்கி சாதனை படைத்தது மிந்த்ரா. வாணி கோலாவை ‛முடியாது என்பதையும் முடியும் என்று நம்புபவர் வாணி’ என ரத்தன் டாடா புகழ்ந்துள்ளார்.

ஒரு தொழில்முனைவோருக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது என்பது அவரது வளர்ச்சிக்கு மட்டுமல்ல, அதன் தாக்கம் நாட்டின் பல்வேறு மக்களுக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும் எனபதே வாணி கோலாவின் கொள்கை. எனவே சிறுமுதலீட்டாளர்களை உருவாக்க அவர் தீவிரமும், ஆர்வமும் காட்டி வருகிறார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)