பதிவு செய்த நாள்
03 நவ2016
05:16
புதுடில்லி : ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், முன்னெப்போதும் இல்லாத வகையில், அக்டோபரில், 64,372 கார்களை விற்பனை செய்துள்ளது; இது, ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச விற்பனையாகும்.
கடந்த ஆண்டு இதே காலத்தில், 61,701 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இதே காலத்தில், உள்நாட்டு கார் விற்பனை, 6.4 சதவீதம் உயர்ந்து, 47,015லிருந்து, 50,016 ஆக அதிகரித்து உள்ளது. அதேசமயம், ஏற்றுமதி, 2.2 சதவீதம் குறைந்து, 14,686லிருந்து, 14,356 ஆக சரிவடைந்து உள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஒய்.கே.கூ கூறுகையில், ‘‘ நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை, மிக விரைவாக, 15 மாதங்களில், 40 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது,’’ என்றார். டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், இதுவரை இல்லாத அளவிற்கு, அக்டோபரில், அதிகளவில் கார்களை விற்பனை செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|