பதிவு செய்த நாள்
03 நவ2016
05:17
மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், ‘ஆர்ஜியோ’ நிறுவனத்தின் கீழ், செப்., 5 முதல், இந்தியாவில் மொபைல் போன் சேவையை துவக்கியுள்ளது.
டிசம்பர் வரை இலவச சேவை அறிவிப்பு காரணமாக, ஆர்ஜியோ மொபைல் போன் சேவையை பெறுவோர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இம்மாத இறுதிக்குள், சந்தாதாரர் எண்ணிக்கை, 3.50 கோடியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜியோவின் போட்டியால், பார்தி ஏர்டெல் நிறுவனம், 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தொலை தொடர்பு சேவைகளை விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அது போல, வோடபோன் நிறுவனம், 700 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், ஆர்ஜியோவில், மேலும், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு, 2.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|