பதிவு செய்த நாள்
03 நவ2016
05:17
மும்பை : குஜராத்தில், ஆமதாபாத் – காந்தி நகர் இடையே, ‘கிப்ட்’ எனப்படும், குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் உருவாகி வருகிறது.
இங்கு, இந்தியாவின் முதல் சர்வதேச நிதிச் சேவைகள் தொழில்நுட்ப மையம் அமைய உள்ளது. உலகளவில், நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதிகளுடன் உருவாகும் இம்மையத்தில், சர்வதேச பங்குச்சந்தையை அமைக்க, மும்ைப பங்கு சந்தையான – பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. அத்துடன், நிதி பரிவர்த்தனை அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்த உள்ளது. இந்த இரு திட்டங்களுக்கும், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில், சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகத்தை, பி.எஸ்.இ., மேற்கொள்ளும் என, தெரிகிறது. இந்த சர்வதேச பங்குச்சந்தையில், பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள் மீது வர்த்தகம் நடைபெறும். உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு, சர்வதேச நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|