பதிவு செய்த நாள்
03 நவ2016
05:18
புதுடில்லி : இந்தியா, வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கப்படுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவற்றில் ஒன்றாக, வெளிநாடுகள் உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கையில், இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதன்படி, இந்தியா – ஜப்பான் இடையே, பரஸ்பரம் வங்கிக் கணக்கு விபரங்கள், முதலீடுகள், வரி ஏய்ப்பு விபரங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள வசதியாக, இரு நாடுகள் இடையிலான, இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
‘இந்த, திருத்தப்பட்ட இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம், அக்., 29 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், இனி, இந்தியா – ஜப்பான் நாடுகள், இரட்டை வரி தவிர்ப்பு தொடர்பான புதிய விதிமுறைகளை பின்பற்றும்; கணக்கில் காட்டாத பணம் வாயிலான வரி ஏய்ப்பு விபரங்களையும் பகிர்ந்து கொள்ளும்’ என, மத்திய வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|