எஸ் அண்ட் பி மதிப்­பீடு; மத்­திய அரசு கடும் தாக்குஎஸ் அண்ட் பி மதிப்­பீடு; மத்­திய அரசு கடும் தாக்கு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.69 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.69 ...
கட்­டு­மானம், ரியல் எஸ்டேட் துறை­க­ளுக்கு ஒரே தவ­ணையில் கடனை தீர்க்க சலுகை; விரைவில் அறி­விப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2016
05:20

புது­டில்லி : அதிக அள­வி­லான கடன் சுமையால், ரியல் எஸ்டேட், கட்­டு­மானம் உள்­ளிட்ட துறை­களின் வளர்ச்சி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதை­யொட்டி, அதிக கடன் சுமை உள்ள துறை­களை கண்­ட­றிந்து, பிரத்­யேக ஊக்­கு­விப்பு திட்டம் மூலம், அவற்றை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்­டு­மான துறை­களில், முடங்­கி­யுள்ள திட்­டங்­களை உயிர்ப்­பிக்­கவும், கடன் பிரச்­னைக்கு விரைந்து தீர்வு காணும் நோக்கில் விதி­மு­றை­களை தளர்த்­தவும், பணப் புழக்­கத்தை அதி­க­ரிக்­கவும் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்க, மத்­திய அமைச்­ச­ரவைக் குழு, ஏற்­க­னவே ஒப்­புதல் அளித்­துள்­ளது.
நிவாரணம்அதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி, அதிக கடன் சுமை­யுள்ள துறை­களின் நிவா­ரணம் குறித்து ஆய்வு மேற்­கொண்­டது; இப்­ப­ணிகள் தற்­போது முடி­வ­டைந்து, அடுத்த, 8 – 10 நாட்­களில், ரியல் எஸ்டேட், கட்­டு­மானம் ஆகிய துறை­க­ளுக்­கான ஊக்­கு­விப்பு திட்­டத்தை, ரிசர்வ் வங்கி அறி­விக்க உள்­ள­தாக தகவல் வெளி­யா­கிஉள்­ளது. இத்­திட்­டத்தின் கீழ், ரியல் எஸ்டேட், கட்­டு­மானம் உட்­பட, கடன் சுமை அதிகம் உள்ள துறை­களைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு, ஒரே தவ­ணையில், கடனை திரும்பச் செலுத்தும் சலுகை வழங்­கப்­படும் என, தெரி­கி­றது.
கடனை திரும்பச் செலுத்­து­வ­தற்­கான கால­வ­ரம்பில் சலுகை, புதிய கடன் பெறு­வ­தற்­கான முன்­வைப்புத் தொகை வரம்பை குறைப்­பது உள்­ளிட்ட அம்­சங்கள் இத்­திட்­டத்தில் இடம் பெறும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
தயக்கம்வங்­கிகள், கட்­டு­மான துறைக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் அள­விற்கு கடன் வழங்­கி­யுள்­ளன. அவற்றில், 45 சத­வீதம், அதா­வது, 1.35 லட்சம் கோடி ரூபாய், இடர்­பா­டு­டைய வாராகடன்கள் பிரிவில் உள்­ளன. இதனால், வங்­கி­களின் சொத்து மதிப்பு பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக, வங்­கிகள், கட்­டு­மான திட்­டங்­க­ளுக்கு கடன் தரத் தயங்­கு­கின்­றன. இதுவும், கட்­டு­மான துறை வளர்ச்­சியை பாதித்­துள்­ளது. ரிசர்வ் வங்கி அறி­விக்க உள்ள திட்டம் மூலம், கட்­டு­மானம், ரியல் எஸ்டேட் உள்­ளிட்ட துறைகள் எழுச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
‛பொது துறை வங்­கி­களின் மொத்த வாராக்கடன், கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், 4.76 லட்சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, 2014 – 15ம் நிதி­யாண்டில், 2.67 லட்சம் கோடி ரூபா­யாக இருந்­தது. ’
‛அனைத்து புதிய கட்­டு­மான திட்­டங்­க­ளையும், பிரச்­னை­யின்றி சுல­ப­மாக மேற்­கொள்­வ­தற்கு, வழி­காட்டு மையம் அமைக்க, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)