பதிவு செய்த நாள்
03 நவ2016
23:18
புதுடில்லி : காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர், வினய் குமார் சக்சேனா கூறியதாவது:காதி பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஏராளமான, ‘ஆர்டர்’கள் குவிந்து வருகின்றன. அதனால், நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், காதி பொருட்கள் விற்பனை, 5,000 கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வெளிநாடுகளுக்கு, காதி பொருட்கள் நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், இந்திய காதி ஆடைகள், பொருட்கள் ஆகியவற்றுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதனால், விரைவில் நேரடி விற்பனையை துவக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தனி பிரிவுகள் ஏற்படுத்தப்படும். காதி பொருட்களின் தரம் மற்றும் விற்பனையை உயர்த்த, ஆடை வடிவமைப்பு, சந்தைப்படுத்துதல் போன்ற பிரிவுகளில், நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.காதி மற்றும் கிராம தொழில்களில், ஏழு லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|