பதிவு செய்த நாள்
03 நவ2016
23:18
புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த, யெஸ் பேங்க், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, புதிய மொபைல் ‘ஆப்’ சேவையை அறிமுகம் செய்துள்ளது.
யெஸ் பேங்க், இந்தியாவில் வங்கி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வங்கி வாடிக்கையாளர்கள், எளிய முறையில் வங்கி சேவையை மேற்கொள்வதற்கு, ‘யெஸ் மொபைல் 2.0’ என்ற, மொபைல் ஆப் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வங்கியின் வாடிக்கையாளர்கள், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப அடிப்படையிலான, ‘ஸ்மார்ட் வாட்ச்’ மூலம், வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும், இந்த ஆப் வாயிலாக, அனைத்து வகை ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்டு டேப்ளட், ஆப்பிள் ஐபேட்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் வாயிலாகவும், சுலபமாக வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள், இந்த ஆப் மூலம், கட்டணம் செலுத்துவது, புகார் தெரிவிப்பது, சந்தேகங்களை கேட்பது, ‘நெட் பேங்கிங்’ உள்ளிட்ட சேவைகளையும் மேற்கொள்ள முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|