பதிவு செய்த நாள்
03 நவ2016
23:20
மும்பை : சர்வதேச வேலைவாய்ப்பு வலைதளமான, ‘லிங்கட் இன்’ இந்திய மாணவர்களுக்கு, அதிகளவில் பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.
இதற்காக, இந்நிறுவனம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இது குறித்து, லிங்கட் இன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி, நிறுவனத்தின் பணிவாய்ப்பு தகவல் திட்டத்தை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மையமான – ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லுாரிகளும் பின்பற்றும். இத்திட்டத்தின் கீழ், நாட்டின் எந்த பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்களும், வலைதளம் வாயிலான, மதிப்பீட்டு தேர்வில் பங்கேற்கலாம். இதன் மூலம், இந்தியாவில், 30 கார்ப்பரேட் நிறுவனங்களில் காலியாக உள்ள, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு விபரங்களை, மாணவர்கள் நேரடியாக அறிந்து விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|