பதிவு செய்த நாள்
03 நவ2016
23:21
புதுடில்லி : நிக்கி இந்தியா சர்வீசஸ் நிறுவனம், கடந்த அக்., மாதத்திற்கான, சேவை துறையின் வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், நாட்டின் சேவை துறை, 54.50 புள்ளிகளாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, முந்தைய செப்டம்பரில், 52 புள்ளிகளாக இருந்தது.
ஓட்டல், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்டவை, சேவை துறையில் இடம் பெறுகின்றன. கடந்த, 16 மாதங்களாக, தொடர்ந்து, சேவை துறையின், பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல், வளர்ச்சி நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, நிக்கி இந்தியா சர்வீசஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: உற்பத்தி துறைக்கு போட்டியாக, சேவை துறை உருவெடுத்துள்ளது. கடந்த அக்., மாதத்தில், அதிகளவில் புதிய ஆர்டர்கள் கிடைத்ததால், சேவை துறை சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இதனால், இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|