பதிவு செய்த நாள்
03 நவ2016
23:22
மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில், 100 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சோதனை அடிப்படையில், குறிப்பிட்ட, ஏ.டி.எம்.,களில் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 10 சதவீத, ஏ.டி.எம்.,களில், 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் கிடைக்க வசதி செய்யப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துமாறு, அனைத்து வங்கிகளுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏ.டி.எம்.,களில் அதிகளவில், 100 ரூபாய் நோட்டுக்களை நிரப்ப, வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அழுக்கான, பழைய கரன்சிகள் புழக்கத்தை குறைத்து, துாய்மையான கரன்சிகளை அதிகரிக்கும் கொள்கைப்படியும், பொதுமக்களின் நியாயமான தேவையை பூர்த்தி செய்யவும், இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|