பதிவு செய்த நாள்
03 நவ2016
23:22
புதுடில்லி : கடந்த அக்டோபரில், இருசக்கர வாகனங்கள் துறையில், முன்னணி நிறுவனங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.
நாட்டில், இருசக்கர வாகனங்கள் விற்பனையில், ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் முதலிடத்தில் உள்ளது.இந்நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 3.64 சதவீதம் அதிகரித்து, 6,63,153 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 6,39,802 ஆக இருந்தது.இதே காலத்தில், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 15 சதவீதம் உயர்ந்து, 2,64,112லிருந்து, 3,03,885 ஆக அதிகரித்து உள்ளது.
யமஹா மோட்டார் இந்திய நிறுவனத்தின் விற்பனை, 22 சதவீதம் அதிகரித்து, 70,812லிருந்து, 86,428 ஆக உயர்ந்துள்ளது.சென்னையைச் சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 32.8 சதவீதம் உயர்ந்து, 44,522லிருந்து, 59,127 ஆக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 0.27 சதவீதம் குறைந்து, 3,08,733லிருந்து, 3,07,892 ஆக சற்றே குறைந்துள்ளது.
இதற்கு ஏற்றுமதி, 11 சதவீதம் குறைந்தது தான், காரணம். கச்சா எண்ணெய் விலை சரிவு, ஒரு சில நாடுகளில், அன்னியச் செலாவணி மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்றவற்றால், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி குறைந்துள்ளது.அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை, 5 சதவீதம் உயர்ந்து, 2,12,997 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|