பதிவு செய்த நாள்
10 நவ2016
00:01
புதுடில்லி : ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசின் முடிவை, மாஸ்டர் கார்டு, விசா கார்டு நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
மத்திய அரசு, தற்போது, புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை, திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில், பிளாஸ்டிக் கார்டு வாயிலான பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என, மாஸ்டர் மற்றும் விசா கார்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, விசா இந்தியா நிறுவன அதிகாரி ராமச்சந்திரன் கூறுகையில், ‘மத்திய அரசு, தற்போது, எடுத்துள்ள முடிவு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், இந்திய பொருளாதாரம், ரொக்க பணப்புழக்கம் இல்லாத, பெரிய நாடாக உருவெடுக்கும்’ என்றார்.
இதுகுறித்து, மாஸ்டர் கார்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மத்திய அரசின் முடிவால், காகித பணப் பரிவர்த்தனை குறையும். இதன் மூலம், கார்டு வாயிலான பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும். எனவே, மத்திய அரசின் முடிவை, நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|