பதிவு செய்த நாள்
10 நவ2016
00:02
புதுடில்லி : ‘மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதால், ரியல் எஸ்டேட், நுகர்பொருள் சந்தைகள் பாதிக்கும்’ என, பல்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராகேஷ் நங்கியா, நிர்வாக இயக்குனர், நங்கியா அண்டு கோ: மத்திய அரசின் நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை அதிகம் பாதிக்கப்படும். மக்களின் நுகர்பொருள் பயன்பாடு, குறுகிய காலத்திற்கு குறையும். மின்னணு வணிக நிறுவனங்களின், ரொக்கப் பரிவர்த்தனை சார்ந்த விற்பனை குறையும். அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த அனைத்து வர்த்தகத்திலும், தாக்கம் உண்டாகும். எனினும், நீண்ட கால அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்
அனிஸ் சக்ரவர்த்தி, பொருளாதார நிபுணர், டிலோட்டி இந்தியா: விவசாயம், விளைபொருள், நுகர்பொருள் உள்ளிட்ட துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ரியல் எஸ்டேட் துறையில் தான், அதிக பாதிப்பு உண்டாகும். இத்துறையின் வளர்ச்சி மேலும் மந்தமடையும்.இனி, கறுப்பு பொருளாதார நடைமுறைக்கும், கறுப்பு பணத்தை பதுக்குவோருக்கும், எதிரான நடவடிக்கைகள் தொடரும் என, எச்சரிக்கும் விதமாக, மத்திய அரசின் செயல்பாடு உள்ளது
முகேஷ் புடானி, நிர்வாக இயக்குனர், பி.எம்.ஆர் லீகல்: தேசத்தின் பாதுகாப்பு கருதியும், கணக்கில் வராத கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரவும், சரியான நேரத்தில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை அறிவிக்கும் திட்டம் முடிவடைந்து ஒரு மாதம் கழித்து, அதுவும், தீபாவளி முடிந்து, ஒரு வாரத்திற்குப் பின், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பண்டிகை கால தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|