‘ரியல் எஸ்டேட், நுகர்­பொருள் சந்­தைகள் பாதிக்கும்’‘ரியல் எஸ்டேட், நுகர்­பொருள் சந்­தைகள் பாதிக்கும்’ ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.49 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.49 ...
500, 1,000 ரூபாய் நோட்­டுகள் காலா­வ­தி­யா­னதால் டிஜிட்டல் பணப்­ப­ரி­வர்த்­தனை அதி­க­ரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2016
00:03

புது­டில்லி : ‘மத்­திய அரசு, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்­டுக்கள் செல்­லாது என அறி­வித்­ததை அடுத்து, இனி டிஜிட்டல் முறையில் பணப்­ப­ரி­வர்த்­தனை செய்வது அதி­க­ரிக்கும்’ என, தகவல் தொழில்­நுட்ப துறையைச் சேர்ந்த, ‘நாஸ்காம்’ அமைப்பு மதிப்பிட்டுள்­ளது.
இது குறித்து, இந்த அமைப்பு வெளி­யிட்­டுள்ள ஆறிக்கை: மத்­திய அரசு, கறுப்பு பணத்தை கட்­டுப்­ப­டுத்­தவும், கள்ள ரூபாய் நோட்­டு­களை ஒழிக்­கவும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்­டுகள் செல்­லாது என, அறி­வித்­துள்­ளது. இந்த நோட்­டு­களை, ‘பான் கார்டு’ அல்­லது வாக்­காளர் அடை­யாள அட்­டையை காட்டி, வங்­கி­களில் மாற்றிக் கொள்­ளலாம் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வகையில், ஒருவர் பதுக்கி வைத்­துள்ள கறுப்பு பணத்தை வங்கி கணக்­கிற்கு மாற்றும் பட்­சத்தில், அவர், வரி வரம்­பிற்குள் வந்து விடுவார்.
இதை­ய­டுத்து, அவர், ரொக்கப் பரி­வர்த்­த­னையை குறைத்துக் கொண்டு, கம்ப்­யூட்டர், மொபைல்போன் ஆகி­யவை மூலம், சுல­ப­மாக மேற்­கொள்­ளப்­படும் டிஜிட்டல் பணப் பரி­வர்த்­த­னைக்கு மாறுவார். இதனால், கறுப்பு பணப் புழக்கம் கட்­டுக்குள் வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில், மதிப்பு அடிப்­ப­டை­யி­லான மொத்த பரி­வர்த்­த­னை­களில், ரொக்­கத்தின் பங்களிப்பு, 78 சத­வீ­த­மாக உள்­ளது. டிஜிட்டல் பணப் பரி­வர்த்­த­னையின் பங்கு, மிகச் சொற்­ப­மா­கவே உள்­ளது. எனினும், தற்­போ­தைய மத்திய அரசின் நட­வ­டிக்­கையால், டிஜிட்டல் பணப் பரி­வர்த்­தனையை பின்­பற்­றுவோர் எண்ணிக்கை உயரும்.
வலை­தள சந்தை நிறுவனங்கள், பொருட்­களை வீட்­டிற்கே கொண்டு வந்து தந்து, பணம் பெற்றுக் கொள்ளும் வச­தியை வழங்­கு­கின்­றன. மின்­னணு வணி­கத்தில், பெரு­மளவு, பொருட்­களை ஒப்­ப­டைத்து, பணம் பெற்றுக் கொள்ளும் முறையில் நடை­பெ­று­கி­றது. இந்த முறையில், இடர்­பாடு உள்­ள­துடன், அதிக போக்­கு­வரத்து செல­வையும், மின்­னணு வணிக நிறு­வ­னங்கள் சந்­திக்­கின்­றன.அதனால், ரொக்கப் பரி­வர்த்­தனை குறைந்தால், மின்­னணு வணிக நிறு­வ­னங்­களின் செலவு மிச்­ச­மாகும்.
அதே­ச­மயம், ரொக்கப் பரி­வர்த்­தனை, வாங்­குவோர், விற்போர் இடையே பரஸ்­பர நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் நடை­பெ­று­கி­றது. அதனால், உட­ன­டி­யாக ரொக்கப் பரி­வர்த்­தனை குறைந்து விடும் என, எதிர்­பார்க்க முடியாது. எனினும், மத்­திய அரசின் அறி­விப்பு, கறுப்பு பண புழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்தும். அதே­ச­மயம், அதிக மதிப்­புள்ள கரன்­சிகள் தான், கறுப்பு பணத்தின் ஊற்றுக் கண்­ணாக விளங்­கு­கின்­றன.அதனால், 2,000 ரூபாய் நோட்­டு­களை வெளி­யி­டு­வது, கறுப்பு பணப் புழக்­கத்­திற்கும், ரொக்கப் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் வித்­திடும் என்ற அச்­சமும் உள்­ளது.
இருந்­த­போ­திலும், மத்­திய அரசு எடுத்­துள்ள, இந்த வர­லாற்று சிறப்பு மிக்க நட­வ­டிக்கை, பலன் கொடுக்­கும்­பட்­சத்தில், நாட்டில், மிகப் பெரிய அளவில், டிஜிட்டல் பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­படும். இவ்­வாறு அதில் கூறப்பட்டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)