பதிவு செய்த நாள்
10 நவ2016
10:29
புதுடில்லி : மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக வங்கிகள் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம்.,க்கள் மூடப்பட்டன. நவம்பர் 11 ம் தேதி முதல் மக்கள், வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 30 ம் தேதி வரை இதற்காக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று புதிய ரூ.500 மற்றும் 2000 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது. இதனையடுத்து இன்று வங்கிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட உள்ளதாகவும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளிலும் வங்கிகள் திறக்கப்பட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|