பதிவு செய்த நாள்
10 நவ2016
10:52
சென்னை : ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1456 உயர்ந்தது. இதனால் சராசரி மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் தங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.49ம், சவரனுக்கு ரூ.392 ம், பார்வெள்ளி விலை ரூ.230 ம் குறைந்துள்ளன. சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3011 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ. 31130 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24,088 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.47.40 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.230 குறைந்து ரூ.44,340 ஆகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|