பதிவு செய்த நாள்
11 நவ2016
06:05
புதுடில்லி : மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்ததாஸ், டில்லியில், பொருளாதார செய்தியாசிரியர்கள் மாநாட்டில் பேசியதாவது: இந்தியாவில் பங்கு வர்த்தகம் மேற்கொள்ள, உரிய விதிமுறைகளின் கீழ், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல, விளைபொருள் முன்பேர வர்த்தகத்திலும், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து, நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யும் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான பரிந்துரைக்கு, செபி இயக்குனர் குழுவின் ஒப்புதல் தேவை. இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு அனுமதி வேண்டும். அதன் பின்னே, நிதியமைச்சகம் விளைபொருள் முன்பேர வர்த்தகத்தில், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களை அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்கும். இதில், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|