பதிவு செய்த நாள்
11 நவ2016
06:07
சென்னை : ‘‘சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வணிகம், 50 ஆயிரத்து, 608 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது,’’ என, அவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான, என்.காமகோடி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், எங்கள் வங்கி திரட்டிய டெபாசிட், 28 ஆயிரத்து, 393 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டில், 25 ஆயிரத்து, 616 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், வங்கி வழங்கிய கடன், 18 ஆயிரத்து, 935 கோடி ரூபாயில் இருந்து, 22 ஆயிரத்து, 215 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. செப்., மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், வங்கியின் மொத்த வணிகம், 50 ஆயிரத்து, 608 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏ.டி.எம்., கார்டு தொலைந்து போனால், மொபைல் ஆப் மூலம், ‘பிளாக்’ செய்யும் புதிய சேவை துவங்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற, ‘ரோபோ’ சேவை, சில தினங்களில், சென்னை, தி.நகரில் உள்ள வங்கி கிளையில் துவங்கப்படும்; விரைவில், அனைத்து கிளைகளிலும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|