பதிவு செய்த நாள்
11 நவ2016
06:08
புதுடில்லி : ‘‘நம் நாட்டில், 1 லட்சம் கோடி ரூபாய் செலவில், துறைமுகங்களை நவீனமாக்கி, மேம்படுத்தும் திட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன,’’ என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தனியாரை விடஅவர், டில்லியில், அடுத்த தலைமுறை துறைமுகங்களின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து, தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டு குழுவின் ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக, துறைமுகங்களை மேம்படுத்த, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துள்ளன. இந்தாண்டு, தனியாரை விட, அரசு துறைமுகங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
துறைமுக ரயில் இணைப்பு கழகம், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், ஒடிசாவில், 6,000 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், தால்ச்சர் – பரதிப் துறைமுகம் இடையிலான, 200 கி.மீ., ரயில் பாதை திட்டமும் அடங்கும். இது தவிர, ஆறு புதிய துறைமுகங்களை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
துரித வேகத்தில்துறைமுகங்களை நவீனமாக்கவும், அவற்றுடன், சாலை, ரயில் போக்குவரத்தை இணைக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பழைய விதிமுறைகள் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன. திட்டங்கள், துரித வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல, துறைமுகங்களில் தகவல் தொழில்நுட்ப கொள்கை திட்டங்களை, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என, ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆனால், நம் நாட்டில், அத்தகைய செயல்பாடு, இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளது. சிங்கப்பூர், ரோட்டர்டாம் துறைமுகங்கள், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு மூலம், சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்தி வெற்றி கண்டுள்ளன. ஆய்வறிக்கையின் வழிகாட்டுதல்படி, இந்திய துறைமுகங்களில், தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|