பதிவு செய்த நாள்
12 நவ2016
01:15
மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த ஆக்சிஸ் பேங்க் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின், கரன்சி நடவடிக்கையால், வங்கியின், ‘டெபிட் கார்ட்’ பரிவர்த்தனை, 35 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கி, 2.50 லட்சம் வணிகர்களுடன், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ரூபாய் 500, 1,000 செல்லாது என, அறிவிக்கப்பட்டதால், வங்கி வாடிக்கையாளர்கள், டெபிட் கார்ட் மூலம், பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது; ‘கிரெடிட் கார்ட்’ பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது, 25 சதவீதம் உயர்ந்துள்ளது. மொபைல்போனில், வங்கியின் யு.பி.ஐ., செயலி வாயிலான பணப் பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன.
ஏராளமான வணிகர்கள், டெபிட், கிரெடிட் கார்ட் பயன்பாட்டிற்கான சாதனங்களை நிறுவுவது குறித்து வங்கியில் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியும், வாடிக்கையாளர் வருகை, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|