பதிவு செய்த நாள்
12 நவ2016
01:19
புதுடில்லி:வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, கார்களில், ‘ஏர்பேக்’ வசதியை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், வாகன விபத்து காரணமாக, பலர் உயிரிழக்கின்றனர். இருப்பினும், விலை உயர்ந்த கார்களில் மட்டுமே இந்த ஏர்பேக் வசதி இருக்கிறது. இந்நிலையில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து வாகனங்களிலும்,‘ஏர்பேக்’ உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் பொருத்துவதை கட்டாயமாக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அதன்டி, 2017 அக்., மாதம் முதல், தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களிலும், ‘ஏர்பேக்ஸ், சென்சார் கேமரா’ வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும், வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வதற்காக, ‘பாரத் நேஷனல் கார் அசெஸ்மென்ட்’ என்ற ஆணையத்தை ஏற்படுத்தவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|