பதிவு செய்த நாள்
12 நவ2016
01:25
மும்பை:டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து, அக்., 24ல் சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இதையடுத்து, டாடா குழுமத்தின் பங்கு முதலீட்டாளர்கள் நலன் கருதியே, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக, மிஸ்திரி சார்பில் ஒரே ஒரு அறிக்கை வெளியானது. ஆனால், மிஸ்திரி நேரடியாக எதுவும் கூறாமல் இருந்தார். இந்நிலையில், வரும் 14ம் தேதி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அப்போது, ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி தொடர்வது குறித்து, இயக்குனர் குழு விவாதித்து, முடிவு எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சைரஸ் மிஸ்திரி, டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடாவுக்கு எதிராக, வெளிப்படையாக கருத்து தெரிவிப்பார் என, தெரிகிறது.சைரஸ் மிஸ்திரியின் செயல்பாடுகள் குறித்து, டாடா சன்ஸ் நிறுவனம் பத்திரிகைகள் வாயிலாக ஒரு பக்க விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|