பதிவு செய்த நாள்
12 நவ2016
01:26
புதுடில்லி:மாநில ஜவுளி துறை அமைச்சர்கள் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசுக்கு மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:ஜவுளி உற்பத்தியை அதிகரிக்கவும், அந்த தொழிலில் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், மத்திய அரசு முடிவு செய்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜவுளி தொழிலில் விரிவாக்கம் செய்ய, மாநில அரசுகள் உதவ வேண்டும். இன்னும் பல மாநிலங்களில் ஜவுளித் துறைக்கு தனியாக அமைச்சர்கள் இல்லாத நிலைதான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜவுளி துறை செயலர் ராஷ்மி வர்மா கூறுகையில்,‘ஏற்றுமதி சந்தையில் காணப்படும், பல வகை வரி விதிப்பு முறையால், ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலுக்கு வரும் போது, ஜவுளி தொழிலில், உற்பத்தி செலவு குறையும். இதனால், பலரும் அந்த தொழிலில் முதலீடு செய்வர்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|