பதிவு செய்த நாள்
12 நவ2016
01:28
புதுடில்லி:‘‘நாட்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை அகற்றும் நடவடிக்கையால், பணவீக்கம் குறையும்,’’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், தேசிய பொருளாதார பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், மேலும் பேசியதாவது:மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என, அறிவித்திருப்பது, வரவேற்கத்தக்கது. இது, இந்திய பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் கறுப்பு பணப் புழக்கத்தை குறைத்து, ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான, பணப்பரிவர்த்தனைக்கு மாறுவதற்கான நல்ல துவக்கம். இதனால், வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் குறையும். அதிகப்படியான ரொக்கப் புழக்கம் அடியோடு மறையும். இவற்றால், குறுகியகால அளவில், பணவீக்கம் குறையும். எனினும், அது, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை பொறுத்து உள்ளது.
நடப்பு நிதியாண்டுடன், ஐந்தாண்டு திட்ட காலம் முடிவடைகிறது. அடுத்த நிதியாண்டு முதல், பழைய நடைமுறைக்கு பதிலாக, 15 ஆண்டு திட்ட காலம் அறிமுகமாக உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:இந்தாண்டு முதல், அனைத்து, ‘டிவி’ சேனல்களும், 60 நாட்களுக்கு முன்னதாகவே பணம் செலுத்தி, ஒளிபரப்பு உரிமையை தன்னிச்சையாக புதுப்பித்துக் கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது.மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என, அறிவித்துள்ளதை, பெரும்பான்மையான, ‘டிவி’ சேனல்கள் பாராட்டியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|