பதிவு செய்த நாள்
16 நவ2016
10:40
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று உயர்வுடன் ஆரம்பமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 316.77 புள்ளிகள் உயர்ந்து 26,621.40-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 101.60 புள்ளிகள் உயர்ந்து 8,210.05-ஆகவும் இருந்தன.
கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை வர்த்தக பணவீக்கம் 4.20 சதவீதமாக சரிந்தது, மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக 3.39 சதவீதமாக சரிந்தது, ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|