பதிவு செய்த நாள்
16 நவ2016
17:50
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று ஏற்ற - இறக்கமாக முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போது இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தான் துவங்கின. ஆசிய, ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும், பணவீக்கம் சரிவாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருந்தன. ஆனால் கடைசி 30 நிமிடத்தில் புகையிலை தொடர்பான பங்குகளில் சரிவு ஏற்பட்டதால் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 5.94 சரிந்து 26,298.69-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 3.15 புள்ளிகள் உயர்ந்து 8,111.60-ஆகவும் முடிந்தன.இன்றைய வர்த்தகத்தில் 1056 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1543 நிறுவன பங்குகள் சரிந்தும், 155 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|