பதிவு செய்த நாள்
17 நவ2016
00:08
இந்துார் : டி.எச்.எல்., நிறுவனம், முதல் சேவை மையத்தை, இந்துாரில் துவக்கியுள்ளது.
சர்வதேச கூரியர் நிறுவனமான, டி.எச்.எல்., இந்தியாவில், 598 நகரங்களில், 33 ஆயிரம் இடங்களில் சேவையாற்றி வருகிறது. இந்நிறுவனத்திற்கு, சிறிய மற்றும் நடுத்தர பிரிவுகளில் இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர் உள்ளிட்ட, 60 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது, ம.பி., மாநிலம் இந்துாரில், டி.எச்.எல்., முதல் சேவை மையத்தை துவக்கியுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர், ஆர்.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது:எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, தரமான சேவை வழங்க உள்ளோம். தொழிற்சாலை, வணிக பயன்பாட்டுக்கு, ம.பி.,யில் உள்ள இந்துார் முக்கிய மையமாக திகழ்கிறது. எனவே, அங்கு, புதிய சேவை மையத்தை துவக்கியுள்ளோம். இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு, விரைவாக சேவை வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|