அக்­டோ­பரில் தங்கம் இறக்­கு­மதி 350 கோடி டால­ராக உயர்வு அக்­டோ­பரில் தங்கம் இறக்­கு­மதி 350 கோடி டால­ராக உயர்வு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.89 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.89 ...
நிறு­வ­னங்கள் பணம் எடுக்கும் வரம்பை உயர்த்த வேண்டும்: இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2016
05:41

புது­டில்லி : ‘கரன்சி தட்­டுப்­பாடு கார­ண­மாக, தொழில் நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால், அவை, வங்­கியில் பணம் எடுப்­ப­தற்­கான கட்­டுப்­பாட்டை தளர்த்த வேண்டும்’ என, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்­பான – சி.ஐ.ஐ., மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­திற்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.
இது குறித்து, சி.ஐ.ஐ., தலைவர் நவுஷத் போர்ப்ஸ் பேசி­ய­தா­வது: மத்­திய அரசு, கறுப்புப் பணப்­பு­ழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தவும், கள்ள நோட்­டு­களை ஒழிக்­கவும், 500, 1,000 ரூபாய் நோட்­டுகள் செல்­லாது என, அறி­வித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. அதே சமயம், நாட்டின் நீண்ட கால நன்­மையை கருதி எடுக்­கப்­பட்ட இந்­ந­ட­வ­டிக்கை, குறு­கிய காலத்­திற்கு, மக்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய அச­வு­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதை, யாரும் மறுக்க முடி­யாது. மிகப்­பெ­ரிய அள­வி­லான இந்த கரன்சி மாற்­றத்­திற்கு, வங்­கிகள் சிறப்­பான ஒத்­து­ழைப்பை வழங்கி வரு­கின்­றன.
அதே சமயம், திரும்பப் பெறப்­படும் பழைய கரன்­சி­க­ளுக்கு ஈடாக, புதிய கரன்­சி­களை உட­ன­டி­யாக புழக்­கத்தில் விட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 500, 1,000 ரூபாய் நோட்­டு­களின் பங்­க­ளிப்பு, 10 சத­வீ­த­மா­கவும், மொத்த பணப்­பு­ழக்­கத்தில், 85 சத­வீதம் என்ற அள­விலும் உள்­ளது. இந்த வகையில், நிதிச் சந்­தையில் இருந்து, பெரு­ம­ளவு பணத்தை திடீ­ரென திரும்பப் பெற எடுத்த நட­வ­டிக்­கையால், மக்கள் சிர­மத்தை சந்­தித்­துள்­ளனர்.
கரன்­சி­களை திரும்பப் பெறு­வ­தாக அறி­வித்து, ஒரு வார­மா­கியும், இன்னும் மக்கள் தங்கள் அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்­கான பணத்தை எடுக்க, வங்­கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் நீண்ட வரி­சையில் காத்­தி­ருக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. பணப்­பு­ழக்கம் குறைந்­துள்­ளதால், சில்­லரை வர்த்­தகம் பெரிதும் பாதிக்­கப்­பட்டு உள்­ளது. இந்­நி­லையில், மூன்று மாத நடப்பு கணக்கு உள்ள நிறு­வ­னங்கள், வாரத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரைதான் வங்­கியில் இருந்து எடுக்க முடியும் என, கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்டு உள்­ளது. இதனால், சில்­லரை வர்த்­தக நிறு­வ­னங்­களின் நிதி­யா­தாரம் பாதிக்­கப்­பட்டு உள்­ளது; நாட்டில் பணப்­பு­ழக்கம் அதி­க­ரித்தால் தான், அவை, பாதிப்பில் இருந்து மீள முடியும்.
பணப்­பு­ழக்க பிரச்னை, அடுத்த மாதமும் நீடித்தால், அது, கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் காலாண்டு வரு­வாயில், மிகப்­பெ­ரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். அவை, ஊழி­யர்­களின் ஊதியம், நிர்­வாகச் செலவு உள்­ளிட்­ட­வற்றை சமா­ளிக்க வச­தி­யாக, வங்­கியில் பணம் எடுப்­ப­தற்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள வரம்பை, உட­ன­டி­யாக உயர்த்த வேண்டும். பணப்­பு­ழக்கம் அதி­க­ரித்தால் தான், நிறு­வ­னங்­களின் செயல்­பாடு, இயல்பு நிலைக்கு திரும்பும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)