பதிவு செய்த நாள்
17 நவ2016
09:55
மும்பை : ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து பணதட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை சரியாகி வருவதால் கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள், சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்துடன் காணப்பட்டன. இந்நிலையில் பங்குச்சந்தைகள் இன்று மீண்டும் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் இருந்த போதிலும், எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவுடன் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (நவம்பர் 17, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 11.96 புள்ளிகள் சரிந்து 26,286.73 புள்ளிகளாகவும், நிப்டி 8.15 புள்ளிகள் சரிந்து 8103.45 புள்ளிகளாகவும் உள்ளன. பெல், கெயில், அதானி போட்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், கோல் இந்தியா, சிப்லா, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|