பதிவு செய்த நாள்
17 நவ2016
11:43
புதுடில்லி: கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை முடக்க, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில், மொத்தமாக பணம் கொடுப்பவர்களுக்கு, வீடு விற்பனை செய்வதை, கட்டுமான நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன.
இது குறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், பி.மணிசங்கர் கூறியதாவது: தற்போதைய சூழலில், வங்கிக் கடன் பெற்று, வீடு வாங்கும் நபர்களிடம் மட்டுமே, விற்பனை ஒப்பந்தம் செய்கிறோம். அதுவும், அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை, ரொக்கமாக தருவதை தவிர்க்கும்படி அறிவுறுத்துகிறோம். கறுப்பு பண முதலைகள், அதிக அளவு பணத்துடன், சில பில்டர்களை அணுகி உள்ளனர். இத்தகைய நபர்களிடம், கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளது.
வீடு வாங்க வருவோர் செலுத்திய தொகை கறுப்பு பணமாக இருந்தால், நாங்களும் தேவையற்ற சிக்கல்களை சந்திக்க வேண்டும். எனவே, ரொக்கமாக பணம் எடுத்து வருவோரை தவிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். வங்கி ஊழியர்களும், பழைய நோட்டுகளை மாற்றிக் கொடுப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அதனால், வீட்டுக் கடன் தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. வீட்டுக் கடனுக்காக யாராவது அணுகினால், 'தற்போதைய நிலைமை சீராகட்டும்; அதுவரை காத்திருங்கள்' என, வங்கிகளிடம் இருந்து பதில் வருகிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|