பதிவு செய்த நாள்
18 நவ2016
00:58
புதுடில்லி : மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ், டில்லியில் நேற்று, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து பேசினார்.
இதையடுத்து, ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘‘பில்கேட்ஸ், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம், ஆதார்’ அடிப்படையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், ஆரோக்கிய பராமரிப்பு துறையில் டிஜிட்டல் பயன்பாடு ஆகியவை குறித்து விசாரித்து, அப்பிரிவுகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார்,’’ என்றார்
பில்கேட்ஸ் கூறியதாவது: மத்திய அரசு, ‘பேமன்ட் பேங்க்’ ஆதார் போன்றவற்றுக்கான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், நாங்கள் மென்பொருள் சேவைகளை வழங்குவோம். குறிப்பாக, ஆரோக்கிய பராமரிப்பு தகவல்களை ஒருங்கிணைப்பது, வேளாண்துறையில் டிஜிட்டல் பயன்பாடுகள், கணினி பாதுகாப்பு உள்ளிட்டவற்றில், இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|