பதிவு செய்த நாள்
18 நவ2016
00:58
புதுடில்லி : நெதர்லாந்து நாட்டு நிறுவனங்கள், இந்தியாவில், வேளாண், உணவு பதப்படுத்தும் தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, 20 பேர் கொண்ட குழு, அந்நாட்டு அமைச்சர் ஜாப் பாண்ட் தலைமையில், இந்தியா வந்துள்ளது. இக்குழு, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் புனேவில், சுற்றுப்பயணம் செய்து, தொழில் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தது.
இது குறித்து, அந்நாட்டு அமைச்சர் கூறியதாவது: இந்தியா – நெதர்லாந்து இடையிலான பரஸ்பர வணிகம், தற்போது, மூன்று சதவீதம் என்றளவில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. எங்கள் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள், வேளாண், உணவு பதப்படுத்துதல், மோட்டார் வாகனம் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான வணிகம், ஐந்து சதவீதமாக உயரும். தற்போது, இந்தியாவைச் சேர்ந்த, 180 நிறுவனங்கள், எங்கள் நாட்டில் தொழில் துவக்கியுள்ளன. நெதர்லாந்து நிறுவனங்களான, ‘பிலிப்ஸ், யுனிலீவர், டாம்டாம், எல்சேவியர்’ உள்ளிட்டவை, இந்தியாவில் அலுவலகத்தை துவக்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|