பதிவு செய்த நாள்
18 நவ2016
00:59
ஐதராபாத் : பதஞ்சலி நிறுவனம், தெலுங்கானா மாநிலத்தில், உணவு பதப்படுத்தும் பூங்கா ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.
பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேதம், மூலிகை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பல மாநிலங்களில், உணவு பூங்காக்களை அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த வரிசையில், தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில், உணவு பதப்படுத்தும் பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, அந்த இடத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்து, பதஞ்சலி நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா, ஆய்வு செய்தார்.
இது குறித்து, பாலகிருஷ்ணா கூறியதாவது: எங்கள் நிறுவனம், தெலுங்கானாவில் உள்ள லக்கம்பள்ளி கிராமத்தில், உணவு பதப்படுத்தும் மண்டலம் அமைக்க உள்ளது. அந்த கிராமத்தை சுற்றியுள்ள ஆர்மூர், பல்கொண்டா ஆகிய இடங்களில், இரண்டு லட்சம் ஏக்கரில், மஞ்சள் சாகுபடி நடக்கிறது. நாட்டின் மொத்த மஞ்சள் தேவையில், அந்த பகுதிகளின் பங்கு அதிகளவில் உள்ளது. ஆலை அமைக்கும் பணி, விரைவில் துவங்கும். இதன் மூலம், உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|