பதிவு செய்த நாள்
18 நவ2016
01:00
புதுடில்லி : இந்தியாவில், புகையிலை பொருட்கள் துறையில், அன்னிய முதலீட்டுக்கு முற்றாக தடை விதிக்க, மத்திய அமைச்சரவை அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பரிந்துரையின் இறுதி வடிவத்தை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது.
மத்திய அரசு, பல்வேறு துறைகளில் செய்யப்படும், நேரடி அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக இருந்தாலும், புகையிலை துறையில், பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது.இந்நிலையில், அடுத்தகட்டமாக, புகையிலை துறையில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு முழு தடை விதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அமைச்சகங்களுடைய அனுமதியை, குறிப்பாக, சுகாதாரம் மற்றும் நிதி அமைச்சகங்களின் அனுமதியையும் பெற்ற பின்னே, இந்த பரிந்துரையை, வர்த்தக அமைச்சகம் தயார் செய்திருப்பதாக தெரிகிறது.தற்போது, புகையிலை துறையை பொறுத்தவரை, தொழில்நுட்பம், பிராண்டு உரிமம், பெயர், மேலாண்மை உள்ளிட்ட வகைகளில் மட்டுமே, அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
சிகரெட், சுருட்டு உள்ளிட்டவற்றின் நேரடி தயாரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அடுத்தகட்டமாக, முற்றாக தடை விதிப்பதன் மூலம், மறைமுகமாக இத்துறைக்கு வெளிநாட்டு நிதி வருவது தடுக்கப்படும். தற்போது, அன்னிய நேரடி முதலீட்டுக்கு முழு தடை விதிக்கப்படும் பட்சத்தில், இத்துறையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்கள், சரிவை சந்திக்கும் என, கருதப்படுகிறது.ஏற்கனவே, சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை படத்தை பெரிதாக அச்சிடுவது குறித்த, அரசின் ஆணையை, பல நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|