பதிவு செய்த நாள்
18 நவ2016
01:01
சிங்கப்பூர் : ‘மத்திய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையால், வங்கிகளில், ‘டிபாசிட்’ அதிகரிக்கும் என்பதுடன், நாட்டின் பணவீக்கம் குறையும்’ என, சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கி தெரிவித்து உள்ளது.
அதன் விபரம்:மத்திய அரசு, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து, கரன்சி துறையில், மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொண்டு உள்ளது. இதனால், வங்கி டிபாசிட் அதிகரித்து, நிதிச் சந்தையில் பணப்புழக்கம் பெருகும். நிதிச் சந்தையில், கடன்களுக்கான வட்டி விகிதம் சரிவடையும். அது போல, வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியும் குறையும். இதன் தாக்கத்தால், பணவீக்க பாதிப்பு குறையும்; ஏற்கனவே, நாட்டின் பணவீக்கம், சாதகமான சூழலில் உள்ளது.
கடந்த அக்டோபரில், நுகர்வோர் விலை அடிப்படையிலான சில்லரை பணவீக்கம், 4.2 சதவீதமாக குறைந்துள்ளது; இது, ஜூலையில், 6.1 சதவீதமாக இருந்தது. காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியால், உணவுப் பொருட்கள் பணவீக்கம் குறைந்துள்ளது. இது, ஒட்டுமொத்த சில்லரை பணவீக்கம் குறைய வழிவகுத்து உள்ளது.
பருவமழை பொழிவு; வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஏற்றம்; நிர்வாக நடவடிக்கைகள் போன்றவற்றால், இந்தாண்டு உணவு பணவீக்கம், ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக, 4.8 சதவீதம் என்றளவில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|